ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்
15 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.*
இன்றைய கூட்ட முடிவில் இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
(1) ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிகைகைகளை நிறைவேற்ற 28.12.2023 வியாழக்கிழமை திட்டமிட்டபடி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துதல்
(2)சென்னையில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
கோரிக்கைகள்:
CPS திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்
சரண் விடுப்பு ஊதியம், ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.
காலிப் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும்.

No comments:
Post a Comment