Thursday, June 6, 2019

School Morning Prayer Activities ( 07.06.2019 )


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.06.19


திருக்குறள்


அதிகாரம்:ஒப்புரவறிதல்

திருக்குறள்:212

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

விளக்கம்:

ஒருவர் முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே பயன்பட வேண்டும்.

பழமொழி

Drawn wells seldom dry

இறைக்கிற ஊற்றே சுரக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. இந்த பு‌திய வருடம் எனக்கு கடவுளால் கொடுக்க பட்ட கொடை

2. எனவே எனது ஒழுக்கம், படிப்பு, பண்பாடு, கீழ்படிதல், இயற்கை வளங்கள் பேணுதல் மற்றும் எனது திறமைகள் மூலம் நான் பயிலும் பள்ளிக்கும் எனது நாட்டிற்கும் பெருமை தேடித் தருவேன்.

பொன்மொழி

பண்பு தான் உடலுக்குப் பொலிவூட்டும், அறிவுக்கு ஒளியூட்டும், ஆற்றலுக்கு துணைநிற்கும், புகழுக்கு வழிக்காட்டும்.

  __முனைவர். சேயோன்

 பொது அறிவு
 ஜூன் 8 - உலக பெருங்கடல் தினம்

1.'கடல் தங்கம்' என அழைக்கப்படுவது எது?

சுறா மீன்

2.'கடல் விவசாயம்' எனப்படுவது எத்தொழில்?

இறால் பண்ணை அமைத்தல்

English words & meanings

Calf - baby cow, கன்று குட்டி, கெண்டைக் கால்

Candy - sugar coated sweet, மிட்டாய்

ஆரோக்ய வாழ்வு

நாவல் பழச்சாற்றை தினமும் 3 வேளை தவறாமல்  உட்காெண்டு வந்தால்  நீரிழிவுநாேயாளியின் சர்க்கரை அளவு 15 நாள்களில்  10%  குறையும். 3  மாதத்திற்குள் முற்றிலும்   கட்டுப்படுத்திவிடலாம்.

Some important  abbreviations for students

IFSC - Indian Financial System Code

 MICR - Magnetic Ink Character Recognition

வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு

*  மாவீரன் அலெக்சாண்டர், முசோலினி, ஹிட்லர், நெப்போலியன் ஆகியோர் AILUROPHOBIA என்ற நோயால்   பாதிக்கப்பட்டிருந்தனர். AILUROPHOBIA   என்பது பூனை பற்றிய பயம் ஆகும்.

ஆடலாம்!விளையாடலாம்!

பாரம்பரிய விளையாட்டுகள்: "பல்லாங்குழி"




 பல்லாங்குழி விளையாடுவதன் நன்மைகள்:

1. கூர்ந்து கவனித்தல் திறன் வளர்கிறது.

2.எண்ணுதல் செயல் எளிதாகிறது.

3.கணிதத்தில் மடங்குகள், கூட்டல், கழித்தல், பெருக்கல் திறன்கள் வளர்கின்றன.




4. எதிரில் விளையாடுபவரின் பலத்தை கணித்து, விளையாட்டை நகர்த்திச் செல்லும் திறன் வளர்கிறது.

5. பகிர்தல் திறன் வளர்கிறது.

நீதிக்கதை

மகிபாலன் என்ற மன்னன் தனது முதல் மந்திரியான தர்மசீலரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தான். ஒரு சமயம், அவனுடைய சேனாதிபதி திடீரென இறந்து போக, புதிய சேனாதிபதியை நயமிக்கும் பொறுப்பை மகிபாலன் தர்மசீலரிடம் ஒப்படைத்தான்.

உடனே தர்மசீலரும் நாடெங்கிலும் உள்ள பல வீர இளைஞர்களைத் தலைநகரத்திற்கு வந்து வாட்போர், வில் வித்தை, மல்யுத்தம் படைகளை இயக்கும் ஆற்றல், யுத்தத் தந்திரங்கள் ஆகியவற்றில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த அழைத்தார். அந்த அறிவிப்பின்படி, ஏராளமான வீரர்கள் தலைநகரில் கூடினர். ஒவ்வொரு நாளும், பலருடைய திறமைகளையும் உன்னிப்பாக கவனித்த தர்மசீலர் இறுதியில் ரூபசேனன், பராக்கிரமன் ஆகிய இருவரைத் தேர்வு செய்தார். இருவருமே அனைத்து கலைகளிலும் சமமாக இருந்தனர்.

அதனால், இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்துஎடுப்பதில் தர்மசீலருக்கு சிரமம் ஏற்பட்டது. அவர்களை நேரிலே அழைத்த மந்திரி, “நீங்கள் இருவரும் அனைத்து கலைகளிலும் சரிசமமாக இருக்கிறீர்கள். சோதிக்கப்பட வேண்டிய சில குணங்கள் இன்னும் சில உள்ளன. அவற்றை சோதிக்க, நான் உங்களிடம் சபையில் எல்லார் முன்னிலையிலும் மூன்று கேள்விகள் கேட்பேன். அவற்றிற்கு நீங்கள் அளிக்கும் பதில்களைப் பொறுத்து உங்களில் ஒருவரைத் தேர்வு செய்வேன். சம்மதமா?” என்று கேட்டார். இருவரும் அதற்கு சம்மதித்தனர்.

அதன்படி, மறுநாள் இருவரும் சபைக்கு வந்தனர். சபை நரம்பியிருக்க, மன்னரும் மந்திரியும் வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். தர்மசீலர் எழுந்து இருவரையும் நோக்கி, “சேனாதிபதி பதவிக்குரிய மற்றும் சில குணாதிசயங்களை சோதிக்க நான் உங்களை மூன்று கேள்விகள் கேட்கப் போவதாகக் கூறினேன். என்னுடைய முதல் கேள்வி: பிரதான சாலையில், இரு இளைஞர்கள் ஒருவரோடு  சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்! உடனே, நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றார்.

உடனே பராக்கிரமன், “என்னிலும் வயதில் சிறியவன் ரூபசேனன்! முதலில் அவனுக்கு வாய்ப்பை அளியுங்கள்!” என்றான். தர்மசீலரும் ரூபசேனன் பக்கம் திரும்பினார். உடனே ரூபசேனன், “ஐயா! பிரதான சாலையில் இருவர் சண்டையிடுவது சட்டப்படி குற்றம்! அதனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். பிறகு அவர்கள்  இருவரிடம் சண்டையின் காரணத்தை அறிந்து அவர்களை மன்னர் முன் தீர்ப்பு வழங்குவதற்காக நிறுத்துவேன்” என்றான்.

பராக்கிரமனோ, “இருவர் பிரதான சாலையில் சண்டையிடுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இருக்கும்! நான் அவர்கள் சண்டையிடுவதைத் தவிர்த்து, காரணம் கேட்பேன்! தவறு யார் பேரில் உள்ளது என்று தெரிந்து கொண்டு அவர்களது சண்டைக்கான காரணத்திற்குத் தீர்வு கொடுப்பேன்” என்றான். சபையில் தர்மசீலர், மன்னர் உட்பட அனைவருக்கும் அவனுடைய பதில் திருப்திகரமாக இருந்தது. தர்மசீலர் தனது அடுத்த கேள்வியைக் கேட்டார். “நாட்டில் சில கலகக்காரர்கள் மக்களை மன்னருக்கு எதிராக ராஜதுரோகக் காரியங்களில் தூண்டி விடுகின்றனர் என்ற தகவல் உங்களுக்குக் கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு ரூபசேனன், “எனது திறமைவாய்ந்த ஒற்றர்கள் மூலம் அந்த சதிகாரர்களைக் கண்டு பிடித்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். அவர்களுடைய தலைவன் யார், அவர்கள் எந்த மாதிரியான நாசவேலைகளில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கும் நமது பகைவர்களுக்கும் தொடர்பு உள்ளதா, என்பது போன்ற ரகசியங்களைக் கண்டு பிடித்து விட்டு சேனையின் உதவியோடு அவர்களை அழித்து விடுவேன்” என்று ஆவேசமாகக் கூறினான்.

பராக்கிரமன், “ராஜதுரோக வேலையில் சிலர் ஈடுபடுகின்றனர் எனில் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும்! சதிகாரர்களிடம் அந்தக் காரணத்தை அறிய முயல்வேன். நியாயமான காரணங்களுக்காக அவர்கள் சதிவேலையில் ஈடுபட்டுஇருந்தால், அவர்கள் குறைகளை மன்னருக்குத் தெரிவித்து நீதி வழங்குவேன். ஆனால் பேராசையின் பொருட்டு அவ்வாறு செய்கிறார்களெனில், அவர்களுக்கு தண்டனை அளிப்பேன்!” என்றான்.

பராக்கிரமனின் அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையினர் கரகோஷம் செய்தனர். பிறகு தர்மசீலர் தனது மூன்றாவது கேள்வியைக் கேட்டார். “மன்னருடன் வேட்டையாடச் செல்லும்போது, அவர் மீது ஒரு சிங்கம் திடீரெனப் பாய்ந்தால், என்ன செய்வீர்கள்?” என்றார்.
“என் உயிரைக் கொடுத்து மன்னரைக் காப்பாற்றுவேன்!” என்றான் ரூபசேனன்.

“நான் உடனிருந்தால் மன்னர் மீது சிங்கம் பாய்வதற்கான சூழ்நிலையே உண்டாகாது!” என்றான் பராக்கிரமன். அவனுடைய பதிலைக் கேட்டு, சபையோர் பலமாக கரகோஷம் செய்தனர். சற்று நேரத்திற்குப்பின் தர்மசீலர் இருவரையும் நோக்கி, “உங்களிடம் மூன்று கேள்விகள் மட்டுமே கேட்பதாகக் கூறினேன். ஆனால், இப்போது கடைசியாக மற்றொரு கேள்வியும் கேட்கப் போகிறேன். நமக்கு அருகிலுள்ள ராஜ்யங்கள் மூன்றில், ஒரு ராஜ்யத்தில் தங்கம் நிறைய இருக்கிறது. மற்றொன்றில் தானியங்கள் நிரம்பி உள்ளன. மூன்றாவது ராஜ்யத்தில் ஆயுதங்கள் நிறைய உள்ளன. எந்த ராஜ்யத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றினால், நமக்குப் பயன் உண்டாகும்?” என்றார்.

உடனே ரூபசேனன், “இந்த விஷயத்தில் மன்னரின் தீர்மானமே இறுதியானது. மந்திரியுடன் ஆலோசித்து அவர் எந்த ராஜ்யத்தின் மீது படையெடுக்கக் கூறுகிறாரோ, அதன் மீது படை எடுப்பேன்!” என்றான்.

“படையை பலப்படுத்துவது சேனாதிபதியின் முதல் கடமையாகும். அதற்கு ஆயுதங்கள் மிகவும் அவசியம். ஆயுதங்கள் நமக்குக் கிடைத்துவிட்டால் நம்மால் எளிதில் மற்ற இரண்டு ராஜ்யத்தையும் கைப்பற்றி விடலாம். தைரிய லஷ்மி எங்கிருக்கிறாளோ அங்குதான் மற்ற ஏழு லட்சுமிகளும் வசிக்கும் என்று உங்களுக்குத்தான் தெரியுமே! ஆகையால் நான் முதலில் எந்த ராஜ்யத்தில் ஆயுதங்கள் உள்ளனவோ அதன் மீது தான் படையெடுப்பேன்” என்று மிகவும் கம்பீரமாகப் அளித்தான்.

பராக்கிரமனுடைய அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையில் கரகோஷம் உண்டாகியது. மன்னர் கண்டிப்பாக பராக்கிரமனைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று சபையோருக்கு தெரிந்து விட்டது. அப்படி இருக்கையில் அவர் ரூபசேனனை சேனாதிபதியாக தேர்ந்தெடுப்பதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா!  பராக்கிரமன், ரூபசேனன் இருவருமே போர்க் கலைகளில் சரிசமமாகக் காணப்பட்டார்கள். ஆகையினால், அவர்களுடைய மற்ற தகுதிகளைப் பரிசீலிக்க மந்திரி தர்மசீலர் முயன்றது தவறில்லை.

ஆனால், அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் “மன்னரிடம் அறிவிப்பேன்! அவர் கட்டளைப்படி நடப்பேன்” என்று பதில் கூறிய ரூபசேனனைவிட, பிரச்சினைகளின் மூலகாரணத்தை ஆராய்ந்து தானே செயற்படும்படி பராக்கிரமன் அளித்த அறிவுப்பூர்வமான விடைகளிலிருந்து அவனே சேனாதிபதிப் பதவிக்குத் தகுதியானவன் என்று தெளிவாக இருக்கிறதல்லவா? அவனுடைய பதில்களை சபையோர் மட்டுமன்றி, தர்மசீலரும் பாராட்டினார். அப்படிஇருந்தும், தர்மசீலர் கடைசியில் ரூபசேனனைத் தேர்ந்தெடுத்து அவரது தவறான முடிவைக் காட்டுகிறதல்லவா?

இதிலிருந்து, தர்மசீலர் மதிநுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஒரு சாதாரண வீரனை சேனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது, அவர் நடுநிலையிலிருந்து தவறிவிட்டார் என்பதைக் காட்டுகிறது அல்லவா? ரூபசேனனிடம் அப்படிஎன்ன குணம் அல்லது திறமை உள்ளது என்று அவனைத் தேர்ந்தெடுத்தார்? என்னுடைய இந்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்குநூறாகும்” என்றது.

அதற்கு விக்கிரமன், “மதிநுட்பத்தை மட்டும் வைத்து இருவரையும் பரிசீலித்தால், பராக்கிரமன் நிச்சயமாக ரூபசேனனை விடச் சிறந்தவன்தான்! ஆனால், தர்மசீலர் முன்னமே கூறியபடி, சேனாதிபதி பதவிக்குரிய குணங்களில் முக்கியமான ஒன்று பராக்கிரமனிடம் இல்லை. ரூபசேனனிடம் தான் இருந்தது. ஒரு சேனாதிபதியின் கடமை தனது படைக்குத் தலைமை வகித்து, அவர்களை ஊக்குவித்து, தனது யுத்த தந்திரங்களால் போரினை வெல்வது மட்டும் தான்! மற்றபடி, எந்தப் பிரச்சினைக்கும் முடிவு எடுப்பது அவனுடைய அதிகாரத்தில் இல்லை.
எந்த ஒரு விஷயத்திலும் தீர்மானம் செய்வது மன்னருக்கே உரித்தான உரிமை. அதில் சேனாதிபதி தலையிடக்கூடாது. அரசாங்க விஷயங்களில் ஆலோசனை கூறும் உரிமை மந்திரிக்கு மட்டுமே உண்டு. அவரை ஆலோசனை கேட்பதும், அதன்படி, நடப்பதும், நடக்காததும் மன்னருடைய உரிமை. எல்லா விஷயங்களிலும் தான் நுழைந்து தானே முடிவெடுக்கும் சேனாதிபதி ஆபத்தானவன்! மன்னருடைய அதிகாரத்தை அவன் தன் கையில் எடுத்துக் கொள்வது சற்றும் சரியல்ல!

பராக்கிரமன் அளித்த விடைகளில் இருந்து அவன் மேதாவி என்பது தெளிவானாலும், அத்தகைய மேதாவிகள் மன்னருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க மாட்டார்கள் என்று மந்திரி நம்பினார். அதனால்தான் கீழ்படிந்து நடக்கும் சுபாவம் கொண்ட ரூபசேனனை சேனாதிபதியாகப் பரிந்துரை செய்தார். மந்திரியின் கருத்து அவருடைய தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. ஆகவே, அவர் எடுத்த முடிவே சரியானது!” என்றான்.

இன்றைய செய்திகள்

07.06.2019

* தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

* புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க 22-ல் ஆலோசனை கூட்டம்: மாநில கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு.

* முதல் முறையாக கப்பலில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவி சாதனை படைத்தது சீனா.

* உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.

* புவனேஸ்வரில்  துவங்க இருக்கும் ஹாக்கி சீரிஸ்  பைனல்ஸ் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், டோக்கியோ ஒலிம்பிக் (2020) தகுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம்.

Today's Headlines

🌸Government of Tamil Nadu has issued a permit to open 24 hrs stores in Tamil Nadu for shops and businesses to increase employment .

 🌸 Advisory Meeting in 22 to discuss new education  policy: Ministry of HRD calls for state education ministers.

 🌸China has invented a rocket launcher for the first time  to  launch from ship to space.

 🌸 World Cup Cricket: Sri Lanka beat Afghanistan by 34 runs

 🌸 The Indian team will be eligible for the Tokyo Olympic (2020) qualifying round if the Indian team is doing well in the Hockey Series Finals series to be played in Bhubaneswar.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Tags

+1 EXAM INSTRUCTION 10 HALF YEARLY 10 KEY ANSWERS 10 SCIENCE MATERIAL 10 science practical 10 STUDY MATERIALS 10th quarterly key answers - 2016 11 std material 11 std quarterly 11 SYLLABUS 11th question paper 12 CHEMISTRY 12 key answers download 2018 12 MATERIAL 12th Quarterly Key Answer -2016 Download 12TH SCIENCE MATERIAL 2019 3 STD TERM II 5G 7 pay commission 750 pay fixation copy 7th pay commision 9 MATERIAL achievement chart achievement level ADHAAR adhaar to pan card ADVERTISEMENT ADWD AEEO alm ALM LESSON PLAN ANDROID ANGANWADI ANNUAL EXAM TIME TABLE ANNUAL FORMS APK application ARTICLE AUDIT AWARD b b.ed program BAS BAVANISAGAR BDG-RDG CIRCULAR BEO BEO CELL NO BEO TO HM BEST bhavanisagar BIO-MATRIC BIOMATRIC BONGAL PONUS GO BOOK BACK Q/A BRC BRTE BRTE TRANSFER COUNSELING BT DEPLOYMENT - 2018 Cable tv CALENDER CCE CCE - WORK SHEET CCE SYLLABUS TERM -I CCE SYLLABUS TERM -II CCRT CENSUS CEO CLASS ROOM LANGAUGE cm cell CMBFS CMCELL CO-OPERATIVE SOCIETY COMPETITION COMPOSITION CONSOLIDATE CONSOLIDATED PAY COURT counseling COURT NEWS COURT ORDER CPD CPS CPS. CRC CRC & BRC TRAINING CREMY LAYER CTET CURSIVE DA DA ARREAR SOFT DAILY MATHEMATICS DAS DDE DEE DEO DEO EXAM DEPLOYMENT DGE DICTATION WORDS DIKSHA DLR drawing DSE DSE COUNSELING FORM DSR E TAX PAYMENT E-FILING E-OFFICE E-SR ed teaching practise EDUCATION APP Education District Code EE EE LP EE QP EE QUESTION PAPERS EE SURESH EE TLM EE TRAINING EE VIDEOS EE-2024 EE-LESSON PLAN EE-TERM-3 EER EFILING ELECTION EMIS EMIS TC GENERATION EMPLOYMENT EMPLOYMENT REGISTRATION ENGLISH GRAMMER ENGLISH LEARNING ENGLISH WORKSHEETS ENNUM EZHUTHUM 2023 EPAY SLIP Equallance ESSAY EXAM EXAM TIME TABLE EXCEL EXPRESS PAY ORDER F(a) ACTIVITIES FA(a)&FA(b) FESTIVAL ADVANCE FIN - GO FLASH CARDS FORM FORMAT FORMS G.O's GANGA GUIDE genuineness GO go ms no 404 GO NO 175 go no 238 GO-2018 GPF GRAMA SABA hand writing HBA LOAN Higher Education policy Note 2016-17 HSC HSC - 2015 KEY ANS HSC KEY ANSWERS HSC STUDY MATERIALS hse I STD ICT ICT CORNER ID CARD IFHRMS IGNOU IMART IMPORTANT GO'S INCENTIVE GO INCOME TAX INCOME TAX 2017 INCOME TAX 2019 INCOME TAX 2024 INCOMETAX INCOMETAX- 2016 INCREMENT GO independence day information INSPIRE AWARD INTEREST RATE internal mark IT IT 2016 ITR VIDEOS IV STD IV STD TERM II jacto-jeo jactto judjement copy JUNIOR SENIOR KALAI THIRUVILA KALANJIYAM kalautsav KAMARAJAR Karuvoolam KH AND BC HEAD LAB ASSISTANT LEARNING ENGLISH LEARNING HINDI learning indicators Learning Out Comes LEAVE LIST LEAVE RULES LESSON PLAN LESSON PLAN - 5 LESSON PLAN (NEW SYLLABUS) LESSON PLAN STEPS LSIT OF HOLIDAYS material MATERNITY LEAVE MATHEMATICS - QUIZ MATHEMATICS EXHIBITION MATHS MATHS FORMULA MATHS SYMBOLS mbbs MDM MEDICAL LEAVE mind map MODULE MPHIL-PART TIME -PAERMISSION NAS NATIONAL ANTHEM NATIONAL AWARD NEET NEET 2017 NEET GO DSE NEP new NEW BOOK MATERIAL new curriculum NEW EDUCATION POLICY NEW PAY BILL HAND BOOK NEW PEDAGOGY NEW SYLLABUS NEW SYLLABUS - 2018 NEWS NEWSPAPER NHIS NILP NIOS NMMS NMMS KEY NMMS RESULTS NOON MEAL NOTES OF LESSON NPS(PFRDA) NTSE nupea OBC one man commission PANEL - 2018 PANEL -2016 panel -2017 panel -2019 PANEL GO panel-2015 PANEL-2019 PANEL-2023 paper valuvation PASSPORT PAY FIXATION PAY SLIP Pedagogy PENSION PERIODICAL ASSESMENT PET PFRDA PG PANEL LIST PGTRB KEY ANSWERS PHONETICS PLUSTWO POMMALATTAM VIDEOS PONGAL BONUS GO POST CONTINUANCE POWER POINT PPT SHOW PRE SCHOOL press release PRIMARY HM PRIMARY MATERIALS PROCEEDINGS PROFESSIONAL TAX PROVIDENT FUND PUBLIC EXAM PUPLIC HOLIDAYS PUTHIYA KALVI KOLKAI QR CODE QUARTERLY QUARTERLY EXAM quarterly exam time table QUESTION PAPERS QUESTIONS AND ANSWERS KEY RADHAKRISHNA AWARD RBI READING TAMIL READING WRITING FORMAT recognised by ugc REGULARISATION ORDER REMEDIAL TEACHING RENUMERATION.PAPERVALUVATION REPORT CARD RESULTS RETIREMENT RETIREMENT BOOK REVISION TIME TABLE RH RH-LIST RMSA RMSA QUESTIONS ROAD SAFETY RTE RTI SA QP SABL SABL MATERIAL SABL TIME TABLE salary salasiddhi SALM Samagra Shiksha sastra university SBI SCERT scholarship SCHOOL ADMISSION SCHOOL ANNUAL REPORT SCHOOL CALENDER SCHOOL INSPECTION SCHOOL TEAM VISIT SCIENCE NEWS SCOOL ADMISSION AGE RELAX GO SEAS SENIORITY SGMG SGSP SGSP DETAILS shaala siddhi SHAALAKOSH SLAS slide show slip test 10 SLM KITS SLOW LEARNERS MATERIAL smart class room smc society SPD SPECIAL CASUAL LEAVE special guide 2017 SPECIAL TEACHERS - 2017 SPEECH COMPETITION SPORTS SR ENTRY FORMAT ssa SSA TRANSFER sslc SSLC - MATHS SSLC KEY ANSWERS SSLC QUESTION PAPERS SSLC STUDY MATERIAL SSLC-2016 KEY ANSWER sslcpaper valuvation STATE SENIORITY STATE SENIORITY 2014 strike STUDY MATERIALS SUPER ANNUATION sur plus surplus swatchh bharat SYLLABUS tamil certificate TAMILNADU OPEN UNIVERSITY TAX FORMS TC - FORMAT TDS TEACHER PROFILE TEACHING TEACHING PRACTISE TEACHING TOOLS team visit tengu TERM - 2 TERM - II TERM - III TERM -2 TERM -3 TERM I TERM II TERM- 2 TERM- 3 TERM-2 TET TEXT BOOK Text books THANTHI TV NEWS THB TERM-2 THB TERM-3 Thinking Map THIRD TERM TIME TABLE TLM TLM NEW SYLLABUS TN DA go's TN GOV - ALL FINANCE G.O'S TNCMTSE TNPS -DEPARTMENTAL BULLETIN TNPSC TNPSC - DEO TNPSC - DEPAETMENTAL EXAM tnpsc group exam TNPSC GROUP II A TNPSC VAO TNPSC-ANNUAL PLANNER TNPTF TNSCERT TNSCHOOL TNSED TNTET TNTET - 2017 TNTET 2019 TNTET%CALCULATION TNTP TNURSB TNUSRB TNUSRB KEY Tour TPD Train timings TRAINING TRANSCRITION TRANSFER transfer - 2017 Transfer Certificate proceedings TRANSFER FORMS transfer news TRB TRB - POLYTECHNIC Treasury Treasury Guide TRUST EXAM ugc UNIT TRANSFER upgrade school go UPPER PRIMARY MODULE UPS usefull books V STD TERM II vacant list 2016 VI STD LESSON PLAN video lessons videos VINAYAGA MISSION VRS WORD WALL WORK BOOK WORK DONE REGISTER WORKBOOK-TERM-2 X SCIENCE PRACTICAL YOGA சாதிகளற்ற சமுதாயம் தெரிந்துகொள்ளுவோம தெரிந்துகொள்ளுவோம் படித்ததில் பிடித்தது பதிவேடுகள் பழமொழிகள் மருத்துவம் மன்றங்கள் மாற்றுத்திறனாளிகள்