பிளாஸ்டிக் விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு, நாளை முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும், ஜனவரி, 1 முதல், ஒரு முறை பயன்படுத்திய பின், துாக்கி எறியப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு, அரசு தடை விதித்தது.அன்று முதல், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், விற்றல், எடுத்து செல்லுதல், இருப்பு வைத்தல், பகிர்தல் என, அனைத்து நடவடிக்கைகளுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.அபராதம்புதிய சட்ட விதிகளின்படி, தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு, மூன்று முறை அபராதம் விதிக்கப்படும்.நான்காவது முறை பயன்படுத்தினால், உரிமம் ரத்து செய்யப்படும். பயன்படுத்தப்பட்ட மற்றும் துாக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், வழங்குதல், எடுத்து செல்லுதல்.விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு, முதல் முறை, 25 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் முறை, 50 ஆயிரம்; மூன்றாம் முறை, ௧ லட்சம் ரூபாய், அபராதம் விதிக்கப்படும்.வணிக வளாகங்கள், துணிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால், முதல் முறை, 10 ஆயிரம்; இரண்டாவது முறை, 15 ஆயிரம் ரூபாய்; மூன்றாவது முறை, 25 ஆயிரம் ரூபாய், அபராதம் விதிக்கப்படும்.மளிகை கடைகள், மருந்து கடைகள் போன்ற நடுத்தர கடைகளுக்கு, முறையே, 1,000, 2,000, 5,000 ரூபாய்; சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு, முறையே, 100, 200, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.சுற்றறிக்கைபிளாஸ்டிக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னும், தேர்தல் காரணமாக, அமல்படுத்தப்படாமல் இருந்தது.அதிகாரிகள், சோதனை நடவடிக்கையை குறைத்ததால், பழையபடி வியாபாரிகள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.இதை தடுக்க, பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். நாளை முதல், பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு, சட்ட விதிகளின்படி, அபராதம் விதிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதேபோல், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும்படியும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
No comments:
Post a Comment