அவர்களுக்கு படிவம் பூர்த்தி செய்வது குறித்து விளக்கம் தரப்பட்டது.
நூற்றுக்கணக்கான அலுவலர்கள் குவிந்ததால், அதிகாரிகள் திணறினர். இந்நிலையில், இன்று நடக்கும் பயிற்சி வகுப்பின் இறுதியில் தபால் ஓட்டு சீட்டு பதிவு செய்வது குறித்து விளக்கமளிக்கப்படும். பயிற்சி முடிந்த பின்னர், பெட்டியில் ஓட்டு போடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தவறாக பூர்த்தி செய்யப்படும் தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கையின் போது செல்லாத ஓட்டாக நீக்கம் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட தபால் ஓட்டுக்கள் செல்லாத ஓட்டாக நீக்கப்பட்டது. வரும் தேர்தலில் செல்லாத ஓட்டுக்களின் எண்ணிக்கையை தவிர்க்க அலுவலர்களுக்கு படிவம் எழுத தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment