CONTENTS
இந்த சட்டம் எதைப் பற்றியது?
ஆறிலிருந்து பதினான்கு வயது வரையிலான ஒவ்வொரு குழந்தையும்
இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை பெற்றுள்ளது. அரசியல் அமைப்புச் சட்ட 86ஆவது பிரிவில் சேர்க்கப்பட்டசட்டப்பிரிவு 21ஏ சட்டத் திருத்தத்தின்படி, கல்வி உரிமை மசோதாஇந்தச் சட்டப் பிரிவு சட்டத்திற்கு வலுசேர்க்கிறது,
அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும்இலவச கல்வி வழங்கும். இந்தப் பள்ளிகள் அரசு நிர்வாகக்குழுக்களால், நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளிகள் குறைந்தது 25%குழந்தைகளையாவது அவர்களுடைய பள்ளிகளில் கட்டணம்இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தொடக்கக் கல்விக்கான எல்லாவிதமான அம்சங்களையும் தரத்தையும்கண்காணிப்பதற்காக தொடக்கக்கல்விக்கான தேசிய கமிஷன் ஒன்றுஅமைக்கப்படும்
இந்த சட்டம் ஏன் இன்றியமையாதது?
அரசியல் அமைப்புச் சட்டத்திருத்த அமலாக்கத்தைஉறுதிபடுத்துதற்கான திசையில் அரசின் முதல் நடவடிக்கை என்றகோணத்தில் இந்த சட்ட மசோதா முக்கித்துவம் வாய்ந்தது.
இலவச கட்டாய தொடக்க மற்றும் மேல்நிலை கல்வி வழங்குவதற்கானசட்டம்
எல்லா இடங்களிலும் பள்ளிக்கூடம் ஏற்படுத்தவது
பள்ளி கண்காணிப்பு குழு அமைப்பது _ முறையாக இயங்குவதைக்கண்காணிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
6-14 வயது வரையிலான குழந்தைகள் வேலைக்குஅமர்த்தப்படக்கூடாது என்பதை கண்காணிக்கிறது
இவை அனைத்தும் முறைசார்ந்த பொதுகல்வித்திட்டத்தை மேம்படுத்திஅனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம்சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர்உருவாவதை தடுப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகளைவழங்குகிறது.
இந்த சட்டத்தில் 6 முதல் 14 வரையிலான வயது தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?
அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பப் பள்ளி கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி கல்வி வரை கட்டாயக் கல்வி வழங்குவதை நோக்கமாகக்கொண்ட இந்த மசோதா, இந்த வயதில் வழங்கப்படும் கல்விஅவர்களுடைய எதிர்காலத்திற்காக போடப்படும் அஸ்திவாரமாகஅமையும் என்ற கருத்தைக் கொண்டு உருவானது.
இந்த சட்டத்தின் முக்கியத்துவம் என்ன மற்றும் இதனால் நம் நாட்டுக்குஎன்ன பயன்?
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச்சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்தியகுழந்தைகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க கணமாகும்.
குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொருகுழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதைஅரசு உறுதி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.
உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளைமையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவசகல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலவச கட்டாய ஆரம்பக் கல்வி என்றால் என்ன?
6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளும், தங்கள்வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக்கல்வி கற்க உரிமை பெறுகிறார்கள்.
ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோநேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள்,பாட புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும்செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும்வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.
கல்விக்கான உரிமை நிலைநாட்டப்படுவதில், பெற்றோர் மற்றும்சமுதாயத்தின் பங்கு என்ன?
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச்சட்டம், 2009 நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்குவரலாற்று சிறப்பு மிக்க கணமாகும். இந்தியாவில் முதல் முறையாக,குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், குழந்தைகள் தங்கள்உரிமையான ஆரம்பக் கல்வி பெறுவதற்கு அரசு உத்திரவாதம்அளிக்கிறது.
உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே, குழந்தைகளின் முழுத்திறனும் வெளிப்படும் வகையில், குழந்தைகளை மையப்படுத்தியமற்றும் அவர்கள் விரும்புக் வகையிலான இலவச கல்வி பெற, தேசஅளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையான 8 மில்லியன் குழந்தைகள்பள்ளி செல்லவில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவைதவிர்த்து விட்டு, 2017- க்குள் அனைத்து குழந்தைகளும் ஆரம்பக் கல்விமுடிக்கும் இலக்கை உலகால் அடைய முடியாது.
ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தப்படும் பள்ளி நிர்வாகக் குழுவில்உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும்ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.பள்ளி நிர்வாகக் குழு,பள்ளிக்கான மேம்பாட்டு திட்டங்களை வகுப்பது, அரசு நிதியைமுறையாகப் பயன்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த பள்ளியின்சூழலைக் கண்காணிப்பது ஆகிய பணிகளை செய்யும். பள்ளி நிர்வாகக்குழுக்களில் 50 சதவீதம் பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் உறுப்பினராக இருக்க வேண்டும்என்பதை இச்சட்டம் கட்டாயமாக்கி உள்ளது. சிறுவர் மற்றும்சிறுமியருக்கான தனித்தனி கழிப்பறைகளை ஏற்படுத்துவது, உடல்நலம், சுகாதாரம், மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமைஅளித்து கல்வியை முழுமை பெற வைப்பது ஆகியவற்றில் இவ்வாறானசமுதாய பங்கேற்பு பெரிதும் உதவும்.
கல்விக்கான உரிமைச் சட்டத்தால் எவ்வாறு குழந்தைகள் விரும்பும்பள்ளிகளை உருவாக்க முடியும்?
நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்த, அனைத்து பள்ளிகளும் கட்டமைப்புமற்றும் ஆசிரியர்கள் தொடர்பான நெறிகளை கட்டாயம் நிறைவேற்றவேண்டும். ஆரம்பக் கல்வி நிலையில், ஒவ்வொரு 60குழந்தைகளுக்கும் நன்கு பயிற்சி பெற்ற இரண்டு ஆசிரியர்கள்நியமிக்கப்படுவார்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பள்ளிக்கு வருகை தருவது,பாடத்திட்டத்தை முழுமை செய்வது, குழந்தைகளின் கற்றுக்கொள்ளும்திறனை மதிப்பிடுவது, தவறாமல் பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்களைநடத்துவது ஆகியவற்றை ஆசிரியர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்கவேண்டும். வகுப்புக்கு தகுந்தவாறு அல்லாமல், மாணவர்கள்எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்கும்.
குழந்தைகள் சிறப்பாகக் கற்பதை உறுதி செய்ய ஆசிரியர்களுக்குதேவையான உறுதுணையை அரசு நிறைவேற்றும். பள்ளி நிர்வாகக்குழுவுடன் இணைந்து, பள்ளியின் தரத்தையும் சமத்துவத்தையும் உறுதிசெய்வதில் சமுதாயமும், பெற்றோரும் முக்கிய பங்காற்ற வேண்டும்.ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமைக் கனவை நனவாக்குவதற்குதேவையான அனைத்து சட்ட வடிவங்களையும், ஏதுவானசூழ்நிலைகளையும் அரசு உருவாக்கும்.
இந்தியாவில், எவ்வாறு கல்வி உரிமைச் சட்டத்தைநடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கான நிதியைப் பெறுவது?
குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொருகுழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதைஅரசு உறுதி செய்வதற்கு இச்சட்டம் ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.
உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளைமையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவசகல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு தேவைப்படும் நிதியை, மத்திய மற்றும் மாநில அரசுகள்பகிர்ந்து கொள்ளும். மத்திய அரசு, தேவைப்படும் நிதியை கணக்கிடும்:மாநில அரசுகளுக்கு, இதிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் நிதியாகவழங்கப்படும்.
கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நிதியைமாநிலங்களுக்கு வழங்குவதை பரிசீலிக்கும்படி, மத்திய அரசு, மத்தியநிதிக் குழுவை (Finance Commission) கேட்டுக் கொள்ளலாம்.
சட்டத்தை நடைமுறைபடுத்த தேவைப்படும் மிகுதி நிதிக்கு மாநிலஅரசுகள் பொறுப்பேற்க வேண்டும். சமுதாய அமைப்புகள், மேம்பாட்டுநிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின்பங்களிப்புடன் நிதிப்பற்றாக்குறையை போக்க முடியும்.
கல்வி உரிமையை அடைவதில் உள்ள தடைகள் யாவை?
ஏப்ரல் 1 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. வரைவு விதிகள்மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்மாநிலங்கள் தங்களுடைய விதிகளை வடிவமைத்து, கூடிய விரைவில்அவற்றை வெளியிட வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர்கள், இடம் பெயர்ந்த குழந்தைகள், அதிககவனம் தேவைப்படும் குழந்தைகள், அல்லது சமுதாயம், கலாச்சாரம்,பொருளாதாரம், மொழி, வசிப்பிடம், பாலினம் போன்ற பிறஅடிப்படைகளில் ஒதுக்கப்பட்ட மக்களை சென்றடையும் வகையில்சிறப்பு வழிமுறைகள் இச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. கல்விஉரிமைச் சட்டம், கற்பித்தல் மற்றும் கற்றலில் அதிக தரத்தை அடையமுயற்சிப்பதால், இதற்கு கூடுதல் முயற்சிகளும் தகுந்த சீரமைப்புகளும்தேவைப்படுகின்றன.
குழந்தைகள் விரும்பும் வகையிலான கல்வி கற்பிக்க தேவைப்படும் 1மில்லியனுக்கு மேற்பட்ட புதிய மற்றும் ஏற்கனவே பணியிலுள்ளஆசிரியர்களை அடுத்த 5 ஆண்டுகளில் பயிற்றுவிக்க, புதிய வகைஅணுகுமுறைகள் மற்றும் முயற்சிகள் தேவை.
இன்றைய தேதியில் பள்ளியில் கற்க வேண்டிய 190 மில்லியன்குழந்தைகளில் ஒவ்வொருவருக்கும், அவர்கள் விரும்பும் வகையில்ஆரம்பக்கல்வி பெறுவதை உறுதி செய்ய, அவர்தம் குடும்பத்தினரும்சமுதாயமும், பெரிய அளவிலான பங்களிப்பைத் தரவேண்டும்.
சீரிய தரத்தையும், சமத்துவத்தையும் அடைய, தற்போதுள்ளஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும். முன்பள்ளிக்கல்வியில் முதலீடுசெய்வது குறிக்கோள்களை அடையக் உதவக்கூடிய சிறந்தஅணுகுமுறையாகும்.
பள்ளிக்குச் செல்லாத 8 மில்லியன் குழந்தைகளைப் பள்ளிக்குவரவழைப்பது, அவர்களை பள்ளியில் இருத்துவது மற்றும் அவர்களைவெற்றியடையச் செய்வது போன்ற கடுமையான சவால்களைசமாளிக்க, இலகுத்தன்மை உடைய மற்றும் புதுமையானஅணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.
கல்வி உரிமைச் சட்டத்தை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத்தேவைப்படும் ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களைவிசாரிப்பதற்கும், குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசியகமிஷனுக்கு (The National Commission for the Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை நீதிமன்றத்திற்குஅளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கானமாநில கமிஷனகள் (State Commission for the Protection of Child Rights – SCPCR) அல்லது கல்வி உரிமைப் பாதுகாப்புஆணையங்களை (Right to Education Protection Authority – REPA), ஏப்ரல் 1 முதல் ஆறு மாதங்களுக்குள் அமைக்க வேண்டும்.குறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர்அதிகாரிகளிடம் எழுத்து மூலமான புகார் அளிக்கலாம்.
குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights – SCPCR)அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையங்களால் மேல்முறையீடுகள்மீது முடிவுகள் எடுக்கப்படும். அவற்றால் வழங்கப்படும்தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்றஅதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.
கல்வி உரிமைச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்? அதுஎவ்வாறு நனவாகும்?
சீரிய தரத்தையும் சமத்துவத்தையும் அடைய மற்றும் ஏற்றத்தாழ்வுகளைநீக்க, பெரிய அளவிலான முயற்சிகள் செய்வது முக்கியமாகும்.அரசுகள், சமூக அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள், ஊடகங்கள்மற்றும் பிரபல புள்ளிகள் ஆகிய முக்கிய பங்குதாரர்களை ஐக்கியநாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு ஒன்றுபடுத்தும்.தேவையானவிழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், பணிக்கான அழைப்பு விடுக்கவும்,யூனிசெப் இப்பங்குதாரர்களை ஒருங்கிணைக்கும். சட்டவடிவமைப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம், குழந்தைகளுக்குத்தேவையான முடிவுகளை எட்டுவதற்கு செய்ய வேண்டியநடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தும். கல்வி உரிமைச் சட்டநடைமுறைகளை கண்காணிக்கத் தேவையான மாநில மற்றும் மத்தியஅளவிலான அமைப்புகளை வலுப்படுத்தவும் யூனிசெப்பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றும்.
No comments:
Post a Comment