Pages

Thursday, August 11, 2016

மாணவியை அடித்த ஆசிரியர் கைது

உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவியை அடித்த ஆசிரியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

 பண்ணைப்புரம் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை சமூக அறிவியல் பாட ஆசிரியர் ஜீவரட்சகர் (32) தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறி அடித்தாராம்.
இதில் அந்த மாணவிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவி, கோம்பை போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, ஆசிரியர் ஜீவரட்சகரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

No comments:

Post a Comment