பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 14-ஆம் தேதியும் தொடங்க உள்ளது.
இந்தத் தேர்வுகள் செப்டம்பர் 25-ஆம் தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் காலாண்டுத் தேர்வு அட்டவணை. அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. இதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment