Pages

Sunday, December 17, 2023

*"5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது": -பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.*

 *"5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது": -பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.*


"புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும். 


5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது" என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 


புதிய ஆசிரியர்கள் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் அதிகளவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். 


வட மாவட்டங்களில் அதிகளவில் காலி பணியிடங்கள் உருவாவதால் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.


வேறு மாவட்டங்களில் அதிகமாகவுள்ள ஆசிரியர்களை வட மாவட்டங்களில் காலியிடங்களில் நிரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும். 


5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது. 


இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment