தமிழக மின் வாரியத்தில், 5,000, 'கேங்மேன்' பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூன், 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட கள பணிகளை மேற்கொள்ள, மின் வாரியம், 'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கு, குறைந்தபட்ச கல்வி தகுதி, ஐந்தாம் வகுப்பு. தேர்வுக்கு, மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, ஏப்ரல், 24ல் துவங்கியது. கடைசி நாள், மே, 30 என, அறிவிக்கப்பட்டது.இதுவரை, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூன், 17ம் தேதி வரையும்; தேர்வு கட்டணம் செலுத்தும் அவகாசம், ஜூன், 19ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.மின் வாரியம், 'எலக்ட்ரிகல்' பிரிவில், 300; 'சிவில்' பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர்களை நியமிக்க, 2018 டிசம்பரில், எழுத்து தேர்வு நடத்தியது. அதில், வேலைக்கு தேர்வானவர்களின் விபரம், மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment