காரைக்குடி : பாலிடெக்னிக் டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்களுக்கான, பி.இ., - பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு, காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லூரியில் இன்று துவங்குகிறது. காலை, 9:00 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கும், 3:00 - 4:30 லெதர், பிரின்டிங் பிரிவினருக்கும் நடக்கிறது.
காரைக்குடி அரசு போக்கு வரத்து கழகம் சார்பில், புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, கலந்தாய்வு மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள, 536 இன்ஜி., கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு இதுவரை, 99 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment